“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

தூசோடு மாசும்

ராணி சம்பந்தர்

தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி, குரலுமே வராது
பசை போல் ஒட்டி ஒட்டியே முட்டிய
கண்ணீர் வடிந்து வடிந்தும் ஓடுமே

மாசு படிந்தத புவியின் போராலே
காற்றலையில் காவி பிடித்த கறை
முறையாகப் போராடிக் களைத்ததே
பறை சாற்றும் எரிமலைப் பாறையே
உறைந்துருகிய நெருப்புக் குழம்பே

பூசி மெழுகியே ஊர் ஊராகப் பரவிட
தூசியும் மாசாகப் பறந்து வந்திடவே
மூசி மூசி வசிக்கும் மானிடர் மூழ்கிய
நோயில் புலம்பலோடு புலம்பலாகுதே .

Nada Mohan
Author: Nada Mohan