தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தேவகஜன் சுவிஸ்

என் கண்கள்
பலரை பார்த்து
ரசித்திருக்கலாம்
ஆனால் என் இதயம்
உன்னை! மட்டுமே எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறது.

நீ என் ராசிக்காறி
என்னுள் நுழைந்த இடர்களை
உன் பேரன்பு சுடரால் அகற்றி
இன்பம் தந்தவள் நீ!

இருகரம் கூப்பி
நல்லருள்தாவென
இறைவனிடம் வேண்டிய
வேண்டுதல்கள்
உன் திருமுகம்
கண்ட நாள்முதலாய்
என் வாழ்வில் பலித்துக்கொள்ள
நானோ மிளிர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.

என்றைக்கும் உன் அன்பை
தேடியே என் மனம் தவிக்கும்
என் மீது அன்பு வைக்க
உன்னை மிஞ்ச எவருமில்லை
அதனால் தான் என்னவோ
என் இதயம் உன்னை
மட்டுமே நேசிக்கின்றது.

உந்தன் முகம் பார்க்காமலும்
உந்தன் குரல் கேட்காமலும்
எனக்கு இனிமை கிடையாது
என் இதயச்சுடரே!
உன் வாழ்நாட்களுக்குள்
என் விழிகள் மூடிடவேண்டும்
நீயில்லா வாழ்க்கை
சுடர்தராத திரியைபோன்றது.

உனதன்பு பிடிப்போடு
என் துடிப்பு அடங்கிடணும்
அன்பே! என் ஆருயிரே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading