சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

தேவ கஜன்

நிலாவில் உலா

உன்னோடு நானிருந்த
நினைவை சுமந்தபடி
நிலாவில் உலாச்சென்றேன்
நிஜத்தில் ஒரு முறையாவது
மீண்டும் உனை கண்டு
களிப்புற மாட்டேனோ
என்ற நப்பாசையோடு
அங்கும் எனக்கு ஏமாற்றமே!

நிலா முளுவதும் தேடியும்
என் நெச்சத்தில்
பதிந்து கிடக்கும்
உன் முளுமதி முகத்தை
காணாத ஏமாற்றத்தோடு
கதிகலங்கி விட்டேன்.
காணாத தேசத்தில் நீ!
ஒளிந்திருந்து என்னை
கண்காணித்தது போதும்
கண்முன்னே வா!
காலம் முளுவதும்
உன் கைக்குள்ளே
என் வாழ்வை கடந்திடணும்.

எத்தனை வலிகளை
கடந்தவள் நீ!
அத்தனை வலிகளும்
ஆறும் முன்னே
ஆயுள் முடிந்தவளே!
எனதாயுள் நீட்சியிலும்
நிலைத்தேயிருப்பாய் நீ!

உன் ஒற்றை அன்பிலே
உச்சமான மகிழ்வை
பெற்றவன் நான்
மிச்சமான என் வாழ்வின்
மகிழ்தலுக்காய் நீ காட்டிவிட்டு
சென்ற அன்பை
நினைவில் சேமித்து
என் வலிகளுக்கு மருந்தாக
மீண்டு தடவிக்கொண்டு
ஆறிக் கடக்கின்றேன் வாழ்வை.

எனக்கு சோறூட்ட
நீ காட்டி கதை சொன்ன
நிலாவும் நீழ்வானத்தில்
இன்றும் உலாவிக்கொண்டிருக்க
உன் உலாவல் மட்டும்
அன்றோடு முடிந்ததேன்.
நிலாவை பார்கும் பொழுதுகள்
என் நிலைகளை இழக்கின்றேன்
உன் நிழலினை தேடுகின்றேன்.
அம்மா! அம்மா! அம்மா!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading