தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

செவ்வாய்
சந்தம் சிந்தும் கவி 179.

அப்பா.

அப்பா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
அப்பா என்றால் பாசம்
அப்பா என்றால் எனக்கு
றோல்மொடல்

நல்லவருக்கு நல்லவர்
கெட்டவனுக்கு கெட்டவர்
அப்பா
படிக்க முடியாத புத்தகம்
புத்தி சொல்வதில் ஆசான்
புத்திரருக்கு தலைகுனிவு
வராமல்
பாசத்தை
மனதில் பூட்டியே வேசம்
போட்டுவார்.

சோற்றில் கைவைக்க முன்
பிள்ளை சாப்பிட்டானா
விசாரிப்பார்

அம்மா பாசம் கண்ணாடி
போல தெரியும்
அப்பா பாசம் கதிரவனை
மறைத்திட்ட முகில் போல வெளியே தெரியாது
தெரிந்தவர் சொன்னால்
தெரிந்திடும் அவர்பாசம்.

உழைத்து சிவந்த கைகள்
உடலில் வேத்து வழியும்
நீரும்
அவர் துயரம்
புரியாத பருவம்
புரிந்த போது கண்ணீரே
பதிலாச்சே.

நிழற்படாமாச்சே
அப்பா நல்ல புத்தகம்
மீண்டு எடுக்க முடியாத
சகாப்தம்.

நன்றி அதிபருக்கும் பாவை அண்ணா .
அனைத்து கவி எழுத்தாளருக்கும் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading