நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி
நினைவு

கண்டதும் மனம் ஏதோ நினைவில் தொடர
மறக்க முடியாத உருவம்
கண்ணில் தொடருது

சந்தித்த நேரம்
சிந்தித்த கனம்
மனம் திறந்து கதை
பேச மனம் மயங்கி உறவானது

அன்பான அனைப்பு
நிலையானது

கரங்கள் பற்றி
காதலில் விழுந்து
காலம் முழுதும்
கவிதை வரைந்து
கருவும் வளர்ந்து
சேயானது.

சந்ததி வளர்ந்து
உறவுகள் தொடர்கதையாய்
பரம்பரை வாழ.
பசுமை நினைவுகள் நிழலாடுதே.

அதிபர் பாவை அண்ணா இரவு வணக்கம் நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading