பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நகுலா சிவநாதன்

இப்போதெல்லாம்…..

இப்போதெல்லாம் இணையமயம்
இடர்கள் இன்றி ஓடுது பார்!
தப்பாய் எல்லாம் நடக்குது பார்
தரணி மேவி பெருகுது பார்
உப்பே போட்டு உண்ட உணவு
உப்பே இல்லா உணவாய் இன்று
மப்பாய் சுழலும் காலநிலை
மனிதரில் வேறுபாடு இன்றே பார்!

மேதாவித் தனமாக வாழ்க்கை இன்று
மேதினி பரவி சுழலுது பார்
ஆதாயம் இல்லா வார்த்தைகள் பேசி
அவனியில் பொழுதே நகருது பார்
வேதாந்தம் பேசி வெந்தணல் மேலே
வேண்டுமென்று பழிகள் உலவுது பார்
பாதாளம் வரையும் பயன்களற்றே
பண்பாடு இல்லாச் செயல்கள் பாரீர்!

நாளைய வாழ்வு நமக்கென்று உரைப்போம்
நன்மை செய்தே வாழிட முனைவோம்
தீயமனிதர் பொறாமைத் தீயை
தீதாய் எண்ணி உயர்ந்து செல்வாய்
தூய அன்பு காட்டி நீயும்
துணிந்து செல்ல முயல்வாய் நாளை
நன்றும் தீதும் பிறர்தர வாராது
நன்றாய்ப் புரிதால் மலரும் வாழ்வு

நகுலா சிவநாதன் 1751

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading