” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

இப்போதெல்லாம்…..

இப்போதெல்லாம் இணையமயம்
இடர்கள் இன்றி ஓடுது பார்!
தப்பாய் எல்லாம் நடக்குது பார்
தரணி மேவி பெருகுது பார்
உப்பே போட்டு உண்ட உணவு
உப்பே இல்லா உணவாய் இன்று
மப்பாய் சுழலும் காலநிலை
மனிதரில் வேறுபாடு இன்றே பார்!

மேதாவித் தனமாக வாழ்க்கை இன்று
மேதினி பரவி சுழலுது பார்
ஆதாயம் இல்லா வார்த்தைகள் பேசி
அவனியில் பொழுதே நகருது பார்
வேதாந்தம் பேசி வெந்தணல் மேலே
வேண்டுமென்று பழிகள் உலவுது பார்
பாதாளம் வரையும் பயன்களற்றே
பண்பாடு இல்லாச் செயல்கள் பாரீர்!

நாளைய வாழ்வு நமக்கென்று உரைப்போம்
நன்மை செய்தே வாழிட முனைவோம்
தீயமனிதர் பொறாமைத் தீயை
தீதாய் எண்ணி உயர்ந்து செல்வாய்
தூய அன்பு காட்டி நீயும்
துணிந்து செல்ல முயல்வாய் நாளை
நன்றும் தீதும் பிறர்தர வாராது
நன்றாய்ப் புரிதால் மலரும் வாழ்வு

நகுலா சிவநாதன் 1751

Nada Mohan
Author: Nada Mohan