மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

அச்சாணி நீயல்லவோ!

இல்லத்தின் விளக்காகி
எழுகின்ற நட்சத்திரம்
உள்ளத்தின் மகிழ்விற்காய்
உளமாரக் காத்திருப்பு

உலவுகின்ற பேரொளியே
உணர்வான பெண்மையே!
ஞானத்தின் அறிவுதனை
நாளுமாய் பெற்ற சோதியே!

பிரபஞ்ச தூணாக பைந்தமிழின் பேரோளியே!
செந்தமிழின் நறுந்தேனே!
தெவிட்டாத உன் கடமை
தேர் போன்ற வாழ்விலே
தேனான பெருவிருட்சம்

அச்சாணி நீயாக ஆளும் உலகின்
அரவணைப்புப் பெட்டகமே!
உச்சம் தொட உயர்வாய் என்றும்
ஊக்கம் படைத்து எழுவாய் நாளை!

நகுலா சிவநாதன் 1752

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading