தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்

பொலிவாய் புதுமை தந்த நூலகமே
பொழுதிலும் பூத்த அறிவுப் பெட்டகம்
வலிந்து தீயோர் அழித்த கூடமே
வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய்

ஆசியா கண்ட அரும்பெரும்; நூலகம்
தேசிய பரப்பினை நிறைத்திட்ட பெட்டகம்
பல்லாயிரம் தமிழரை உயர்த்திய ஏணி
பாருக்கே பெருமை தந்த தோணி

தாயக மக்களின் கனவுச் சுரங்கம்
தாராள அறிவினை ஊட்டிய மையம்
பொசுக்கிய தீயில் மடிந்து மாண்டாலும்
நசுக்கிய உள்ளங்கள் நலிந்தே சென்றதே!

சாம்பலின் மேட்டில் சரித்திரம் படைத்தே
தாங்கி நிமிர்ந்து நிற்கிறது பெருமையுடன்
எம்மை வளர்த்த எழில் நூலகமே
உம்மின் பெருமையை உலகில் கண்டோமே

நீண்ட வாழ்வில் நிமிர்ந்து நின்று
தீண்டும் கல்வி விருட்சம் காண
மீண்டும் ஒரு பொசுக்கும் தீ வேண்டாம்
நீண்டு புதுப்பொலிவு கொண்டே எழுகவே

நகுலா சிவநாதன் 1723
(இதனை எடுக்கவும். முதல் பதிவு தவறாக வந்து விட்டது. மன்னிக்கவும்)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading