“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

நகுலா சிவநாதன்

மூங்கில்

புல்லின் இனமே மூங்கில்
புனிதம் ஆன நல்மரமே
வில்லாய் வளைத்தால் வளையும்
விரும்பி ஊத இசையாகும்
புல்லாங் குழலாய் நீயும்
புரிந்து பிறக்கும் நல்லோசை

நாற்பது அடியே வளர்வாய்
நான்கு திசையும் மிளிர்வாயே
ஊற்றாய் நீரை உறிஞ்சி
உணவாய்க் கமிழும் உலகினிலே
நாற்றாய் வளரும் திறனால்
நன்கு விளையும் விண்ணுயர!

பண்டா உண்ணும் உணவாய்
பரிந்து நிற்பாய் மண்ணின்மேல்
கண்டால் அழகுப் பச்சை
களிப்பாய் நிலைப்பாய் மிகுகாலம்
உண்டால் மருந்தாய் நிற்பாய்
உலகின் உயரம் நீயன்றோ!
தண்டால் அரும்பும் ஓசை
தளிர்த்துத் துளிர்க்கும் மரமேநீ!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan