கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

நகுலா சிவநாதன்

உருமாறும் புதிய கோலங்கள்

மாறும் கோலம் யாவும்
மனதுள் இனிமை பூக்கும்
வாழும் காலம் என்றும்
வளத்தை அகத்துள் விதைக்கும்

கோலம் காணும் அழகு
கோடி மின்னல் காட்டும்
ஞாலம் இயற்கை விரிக்கும்
நாளும் நன்மை பிறக்கும்

உருமாறும் இலையும்
உளமார இரும்பாகும்
கூட்டுப் புழுவும் உருமாறும்
கூட இறகும் புதுப்பிறப்பாகும்

மாற்றம் காணுது உலகு
மனதுள் புதுமை வசந்தமாகும்
தடுப்பு தடை‌யை உடைக்கும்
தளிர் நடையும் உலகை உருவாக்கும்

நகுலா சிவநாதன்1650

Nada Mohan
Author: Nada Mohan