பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நகுலா சிவநாதன்

கம்பன்விழா

கன்னித் தமிழ் உரைத்த கம்பன்விழா
கனிவாய் மனத்தில் பதிந்த விழா
அன்னைத் தமிழின் அமுத விழா
ஆனந்தம் தந்த அற்புத விழா

கவியரங்கு கண்ட பெருவிழா
புவியதனில் புடம்போட்ட நன்விழா
விருத்தங்கள் எழுத வைத்த அரங்கிலே
விந்தை ஆயிரம் விருத்தமான பெருமகிழ்வு

முத்தாய் முகிழ்த்த விழாவிலே
முனைப்பாய்ப் பாராட்டிய பாட்டரசர்
சொத்தாய் தொடுத்த ஆயிரம் விருத்தம்
சிறப்பாய் பாவலர்மணி பெற்றிட வைத்ததே

தமிழுக்கு மணிமகுடம் தந்த விழா
அணியாக மக்களும் திரண்டவேளை
மணியாகப் பட்டமும் மலர்ந்திட்டே
மங்களமாய் வாழ்த்துகளும் மனதை நிறைத்ததே!

படைப்புக்கொரு பெருமை கிடைத்தது
பாரில் மகிழ்வு துளிர்த்தது
மடை திறந்த வெள்ளமாய் விருத்தம்
தடையேதுமின்றி விரியட்டும் புதுப்பரப்பு

நகுலா சிவநாதன்1733

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading