பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

நன்றியாய் என்றுமே……

நன்றியாய் என்றுமே……..ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025

நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தசக்தி
மூன்றெழுத்து மந்திரம் மானிடத்தின் அடையாளம்
வெறும் உதட்டில் பிறப்பதல்ல
அடிமனதின் ஆழத்தில் முகிழ்ப்பது தான்நன்றி
அன்னை தந்தை ஆசானின் சேவை
அளவிட முடியா நன்றியின் வித்தே !

நன்றியில்லா வாழ்வு வெறுமை
நன்றிகூறும் மனமே செல்வம்
நன்றியுணர்வில் மனிதம் மலரும்
பாசஉறவில் மகிழ்ச்சி பொங்கும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !

சிறுதுளிஉதவி நதியாய் பெருகும்
ஒருசிறு புன்னகை பரவசமாக்கும்
நன்றியுள்ள மானிடன் இதயத்தில்
ஒன்றித்து வாசம்செய்வான் இறைவனும்
நன்றியென்ற பண்பு இல்லையென்றால்
மனிதமும் மரணித்தேவிடும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !