21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
நாதன் கந்தையா
= நாதம்=
**********
மூங்கிலின் குழல் நுழைந் தொழுகிடும் நாதம்
மோகன மென்றது என்னிடை சேரும்.
முற்பகல் சோலையில் குயிலது கூவும்
மெல்லினம் என்றதைச் சொல்லிடக் கூடும்.
என்னவள் இடை நசிந் தேகிடும்போது
சில்லிடும் கொலுசது மெல்லிய நாதம்
புல்லிடை அமர்ந்தொரு சில்வண்டு பாடும்
புரிதலும் அதுவொரு கரகர கீதம்
தாங்கியோர் மலரிதழ் தே னூம்பிய வண்டு
சிற கிரைந் ததிர்வதும் அதுவொரு வேதம்
காந்தமாய் அலையென காற்றிடை மேவும்
கந்தனின் ஆலயமணி ஒரு நாதம்
காதலன் காதலி கலந் தகமகிழ்ந்து
சீரிய ஒவ்வொரு சிணுங்கலும் நாதம்
தாயவள் மார்பினில் சரிந்த குழந்தையின்
பூவிழி மூட பிறப்பது நாதம்.
-நாதன் கந்தையா-
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...