மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நாதன் கந்தையா

= நாதம்=
**********

மூங்கிலின் குழல் நுழைந் தொழுகிடும் நாதம்
மோகன மென்றது என்னிடை சேரும்.
முற்பகல் சோலையில் குயிலது கூவும்
மெல்லினம் என்றதைச் சொல்லிடக் கூடும்.

என்னவள் இடை நசிந் தேகிடும்போது
சில்லிடும் கொலுசது மெல்லிய நாதம்
புல்லிடை அமர்ந்தொரு சில்வண்டு பாடும்
புரிதலும் அதுவொரு கரகர கீதம்

தாங்கியோர் மலரிதழ் தே னூம்பிய வண்டு
சிற கிரைந் ததிர்வதும் அதுவொரு வேதம்
காந்தமாய் அலையென காற்றிடை மேவும்
கந்தனின் ஆலயமணி ஒரு நாதம்

காதலன் காதலி கலந் தகமகிழ்ந்து
சீரிய ஒவ்வொரு சிணுங்கலும் நாதம்
தாயவள் மார்பினில் சரிந்த குழந்தையின்
பூவிழி மூட பிறப்பது நாதம்.

-நாதன் கந்தையா-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading