நெஞ்சம் மறக்குமா

19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா

கடந்த காலம் நடந்தது
நினைக்கையில் கனத்த
நெஞ்சம் மறக்குமா

தொடர்ந்த கோலம் முடைந்த
அனர்த்தங்களில் சனத்தைத்
தீர்த்த வஞ்சம் மறக்குமா

படர்ந்த இன அழிப்பும்
வான் குண்டு வெடிப்பும்
சிதறிய உடலமும் உதறிய
குருதி உறைந்து அறைந்த
பசுமரத்தாணி அறுக்குமா

கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி
பஞ்சமா பாதகரின் நரக வாழ்வு
அஞ்சி அஞ்சி வீதியில் விதியோடு
நீதி கேட்டு மதி மயங்கும் சதிகள்
துறக்குமா

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading