நேவிஸ் பிலிப்

கவி இல(99) 19/04/23
தாயினும்சிறந்த::::
நலம் தரும் மழையாய் -அன்பை
நானிலம் எங்கும் பொழிந்து
இரவும் பகலும் விலகாது
இதயத்தில் இரக்கத்தை சுரந்து

இமைப் பொழுதேனும் மறவாத
அன்புக்கு இலக்கணமானாய்
இதயங்கள் ஏங்கும் வேளையிலே
இரங்கிடும் அன்பாய் திகழ்கின்றாய்

குன்றுகள் தகர்ந்து போனாலும்
கொள்கைகள் மறைத்து போவதில்லை
குறையற்ற அன்புடனே
நாளும் எம்மைக் காக்கின்றாய்

இறப்பினும் உயிர்ப்பாய் இருக்கின்றாய்
இரவிலும் பகலாய் ஒளிர்கின்றாய்
தாயினும் சிறந்த தயைக் கடலே
உந்தன் தாள் மலர் பணிந்தே போற்றுகின்றோம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading