கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(99) 19/04/23
தாயினும்சிறந்த::::
நலம் தரும் மழையாய் -அன்பை
நானிலம் எங்கும் பொழிந்து
இரவும் பகலும் விலகாது
இதயத்தில் இரக்கத்தை சுரந்து

இமைப் பொழுதேனும் மறவாத
அன்புக்கு இலக்கணமானாய்
இதயங்கள் ஏங்கும் வேளையிலே
இரங்கிடும் அன்பாய் திகழ்கின்றாய்

குன்றுகள் தகர்ந்து போனாலும்
கொள்கைகள் மறைத்து போவதில்லை
குறையற்ற அன்புடனே
நாளும் எம்மைக் காக்கின்றாய்

இறப்பினும் உயிர்ப்பாய் இருக்கின்றாய்
இரவிலும் பகலாய் ஒளிர்கின்றாய்
தாயினும் சிறந்த தயைக் கடலே
உந்தன் தாள் மலர் பணிந்தே போற்றுகின்றோம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading