பாதை மாறும் மானிடர்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து 27.02.25 ஆக்கம் 351

27.02.25
ஆக்கம் 351
பாதை மாறும் மானிடர்

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு
மாறாகத் திசை திருப்பி
ஏற்றியோ அல்லது
இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில்
எதுதான் முடிவோ
இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகப் பட்டு விடும்

மாற்றிய திசையில்
தேடிய பரிதவிப்பு
மாறிட புதிய பாதையில்
பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர்.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading