பாலதேவகஜன்

தாய் புலிக்கு அகவை எழுபது

மழை சொரியும் கார்த்திகையில்
மொட்டவிழ்ந்த நறுமுகையே!
கட்டவிழ்ந்த காட்டாற்று
வெள்ளம் போல
வற்றாத நின் புகழ்
வையகமுள்ள வரை வாழி!

காலப்போர் புரிந்த
ஈழ மறவா!
எங்கள் தலைவா!
புதுவிடியல் புலரும்
ஒரு பொன்நாளில்
நாவெல்லாம் நின்
மாண்பு பேச – தமிழும்
கர்வங்கொள்ள கருவாகும்
திருவே வாழி!

சொல் அல்ல செயலெனும் செயல்வீரனே!
கரைக்குள் அடங்கா
கடலாய் விரியும்
நின் தீரம் சொல்லி பரணிபாட
அந்தமில்லாத் தமிழ் காத்திருக்கு அரனே வாழி!

ஆயிரம் வார்த்தைகளை
அடுக்கடுக்காய்
அமிழ்தினும் இனிதாய் உரைப்பது
கரிக்கும் உப்பில் கடலை
ஒடுக்குவது போல
தீராத சமுத்திர தாகம் நீயே!
கோவே வாழி!

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading