நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பாலதேவகஜன்

தாய் புலிக்கு அகவை எழுபது

மழை சொரியும் கார்த்திகையில்
மொட்டவிழ்ந்த நறுமுகையே!
கட்டவிழ்ந்த காட்டாற்று
வெள்ளம் போல
வற்றாத நின் புகழ்
வையகமுள்ள வரை வாழி!

காலப்போர் புரிந்த
ஈழ மறவா!
எங்கள் தலைவா!
புதுவிடியல் புலரும்
ஒரு பொன்நாளில்
நாவெல்லாம் நின்
மாண்பு பேச – தமிழும்
கர்வங்கொள்ள கருவாகும்
திருவே வாழி!

சொல் அல்ல செயலெனும் செயல்வீரனே!
கரைக்குள் அடங்கா
கடலாய் விரியும்
நின் தீரம் சொல்லி பரணிபாட
அந்தமில்லாத் தமிழ் காத்திருக்கு அரனே வாழி!

ஆயிரம் வார்த்தைகளை
அடுக்கடுக்காய்
அமிழ்தினும் இனிதாய் உரைப்பது
கரிக்கும் உப்பில் கடலை
ஒடுக்குவது போல
தீராத சமுத்திர தாகம் நீயே!
கோவே வாழி!

Nada Mohan
Author: Nada Mohan