“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

பாலதேவகஜன்

பனிப் பூ

இலையுதிர்ந்த மரங்களின்
நிர்வாணங்களை மறைத்து
மானம் காத்துக்கொண்ட
வானம் பொழிந்த ஆடையிது.

காட்ச்சிக்கு விருந்தாய்
கடமைக்கு தடையாய்
காணுமிடமெங்கிலும் பஞ்சாய்
படர்ந்து கிடக்கும் பனிப்பூவே!

வானம் சொரிந்த மலராய்
மண்ணை மூடிய நுரையாய்
பொங்கிய வடிகின்ற பாலாய்
நீ குவியல் கொள்கின்றாய்.

குழந்தைகள் குதூகலமாய்
கூடி விளையாடுடி
பொம்மைகள் ஆக்கி
பெருமகிழ்வு கொள்கின்றார்.

உன் மீது சறுக்கி
சாகசம் காட்ட்டிட
மலைகளை நோக்கியே
வீரர்கள் பயணங்கள் தொடர

வந்து சொரிந்த பூவே!
வாசல் தளுவிய பூவே!
வசந்தமும் உன்னாலே
வருத்தமும் உன்னாலே.

Nada Mohan
Author: Nada Mohan