நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

புதிர்

ராணி சம்பந்தர்

புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு போடு
பிடிபட்டானே உதிர்ந்த தங்கப்பன்

தொடுத்த வினா உங்கப்பன் எங்கே?
வீட்டில் இல்லை எனும் பதில் வராது
சொன்ன விதமோ அதிர்வில் அதிர
கடனை அடைக்கவே முடியாமலேயே
குதிருக்குள் ஒளிர்ந்திருந்த பொய்யே
பொட்டென உடைத்திடுமே

அறிவுத்திறனில் புதிர் பூத்திருக்கும்
விடுகதை தொடுத்து காத்திருக்கும்
சிந்தனையில் சிதைந்த உருவமோ
போர்த்திருக்க தேடித்தேடிய புதுமை
வதைக்க புரிந்தும் புரியா அறிந்தும்
அறியாது தெரியாத புதிருக்கு பதில்
கிடைத்திடுமே கிடைத்திடுமே .

Author: