அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

புதிர்

ராணி சம்பந்தர்

புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு போடு
பிடிபட்டானே உதிர்ந்த தங்கப்பன்

தொடுத்த வினா உங்கப்பன் எங்கே?
வீட்டில் இல்லை எனும் பதில் வராது
சொன்ன விதமோ அதிர்வில் அதிர
கடனை அடைக்கவே முடியாமலேயே
குதிருக்குள் ஒளிர்ந்திருந்த பொய்யே
பொட்டென உடைத்திடுமே

அறிவுத்திறனில் புதிர் பூத்திருக்கும்
விடுகதை தொடுத்து காத்திருக்கும்
சிந்தனையில் சிதைந்த உருவமோ
போர்த்திருக்க தேடித்தேடிய புதுமை
வதைக்க புரிந்தும் புரியா அறிந்தும்
அறியாது தெரியாத புதிருக்கு பதில்
கிடைத்திடுமே கிடைத்திடுமே .

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading