புதுவருடம்

நேற்றுப் பூத்த
விசுவாவசு வருடமே கேளடி – உனை
ஆற்றுப்படுத்தவே வந்தேன் நானடி

ஊறுதர வந்துகுந்துமெம்
உணர்வுகளை அழியடி
ஊன்றாது போகும்
உனக்கும் பழியடி
உலகுக்கும் அதுவே
உய்வுக்கான முதல்வழியடி
மாறுகாட்டு வோரை
மன்னிக்காது கூறுபோடடி
நாறும் உலகு மாறுமடி
நன்றியுடன் உன்னை வாழ்த்துமடி

தங்கு தடையின்றி
வளங்களைச் சொரியடி
தாயாகிப் பங்கிட்டு
யாவர்க்கும் அளியடி
தீங்குதிகில் மீண்டும்
தீண்டாது அணையடி
பொங்கும் அன்பை
நப்பப் பூட்டடி
எங்கும் இன்பத்தை
எந்நாளும் எறியடி
எய்தவள் நீயென்றே
என்றும் பாடுவோம் நாமடி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading