பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

புதுவருடம்

நேற்றுப் பூத்த
விசுவாவசு வருடமே கேளடி – உனை
ஆற்றுப்படுத்தவே வந்தேன் நானடி

ஊறுதர வந்துகுந்துமெம்
உணர்வுகளை அழியடி
ஊன்றாது போகும்
உனக்கும் பழியடி
உலகுக்கும் அதுவே
உய்வுக்கான முதல்வழியடி
மாறுகாட்டு வோரை
மன்னிக்காது கூறுபோடடி
நாறும் உலகு மாறுமடி
நன்றியுடன் உன்னை வாழ்த்துமடி

தங்கு தடையின்றி
வளங்களைச் சொரியடி
தாயாகிப் பங்கிட்டு
யாவர்க்கும் அளியடி
தீங்குதிகில் மீண்டும்
தீண்டாது அணையடி
பொங்கும் அன்பை
நப்பப் பூட்டடி
எங்கும் இன்பத்தை
எந்நாளும் எறியடி
எய்தவள் நீயென்றே
என்றும் பாடுவோம் நாமடி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan