கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

புதுவருடம்

நேற்றுப் பூத்த
விசுவாவசு வருடமே கேளடி – உனை
ஆற்றுப்படுத்தவே வந்தேன் நானடி

ஊறுதர வந்துகுந்துமெம்
உணர்வுகளை அழியடி
ஊன்றாது போகும்
உனக்கும் பழியடி
உலகுக்கும் அதுவே
உய்வுக்கான முதல்வழியடி
மாறுகாட்டு வோரை
மன்னிக்காது கூறுபோடடி
நாறும் உலகு மாறுமடி
நன்றியுடன் உன்னை வாழ்த்துமடி

தங்கு தடையின்றி
வளங்களைச் சொரியடி
தாயாகிப் பங்கிட்டு
யாவர்க்கும் அளியடி
தீங்குதிகில் மீண்டும்
தீண்டாது அணையடி
பொங்கும் அன்பை
நப்பப் பூட்டடி
எங்கும் இன்பத்தை
எந்நாளும் எறியடி
எய்தவள் நீயென்றே
என்றும் பாடுவோம் நாமடி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading