புதுவருடம்

நேற்றுப் பூத்த
விசுவாவசு வருடமே கேளடி – உனை
ஆற்றுப்படுத்தவே வந்தேன் நானடி

ஊறுதர வந்துகுந்துமெம்
உணர்வுகளை அழியடி
ஊன்றாது போகும்
உனக்கும் பழியடி
உலகுக்கும் அதுவே
உய்வுக்கான முதல்வழியடி
மாறுகாட்டு வோரை
மன்னிக்காது கூறுபோடடி
நாறும் உலகு மாறுமடி
நன்றியுடன் உன்னை வாழ்த்துமடி

தங்கு தடையின்றி
வளங்களைச் சொரியடி
தாயாகிப் பங்கிட்டு
யாவர்க்கும் அளியடி
தீங்குதிகில் மீண்டும்
தீண்டாது அணையடி
பொங்கும் அன்பை
நப்பப் பூட்டடி
எங்கும் இன்பத்தை
எந்நாளும் எறியடி
எய்தவள் நீயென்றே
என்றும் பாடுவோம் நாமடி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading