“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

புது வருடம்

ஜெயம்

பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம் இனி நன்னாளே
மடியின் கனமும் குறையும் தானாலே

கோடையிலே பிறந்து மனமகிழ்ச்சி கொடுக்க
ஆடைகளை அழகாய் அனுபவித்தே உடுக்க
மனதிற்குள் புதுவித புத்துணர்ச்சி உண்டாக
இனமாம் தமிழர் குதூகலமாய் கொண்டாட

தமிழ்மக்கள் ஒற்றுமை ஓங்கி வளரட்டும்
அமிழ்தினுமினிய மொழி திசையெட்டும் எட்டட்டும்
கலாசாரம் பண்பாடு தலைமுறைக்கும் நீளட்டும்
விழாக்கானும் புத்தாண்டு அனைத்தும் அருளட்டும்

Nada Mohan
Author: Nada Mohan