கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

புனிதா கரன் கவிதை 05

புனிதா கரன்
கவிதை 05

நவின உலகிலே
நாகரிக மோகமே//
அச் சுறுத்துதே
தொழிநுட்ப வளர்ச்சி//
உயிரைக் குடித்திடும்
கொடிய நோய்களே//
வையகமெங்கும் பரவியே
வாழ்வை பயமுறுத்துதே//
கவலை வாட்டும்
கொடிய நேரத்திலே//
உயிர்நேயம் மாந்தனிடம்
ஊமையானது ஏனோ??//
நம்முன்னோர் போதித்த
நற்சிந்தனைகள் எங்கே??//
காற்றிலே பறக்க
கடமை தவறினோமே//
ஆபத்தைக் கண்டு
உதவிட உள்ளம்//
புகைப்படம் எடுத்து
முகநூலில் பதிவிடுதே//
மனதில் சிறிதும்
ஈரம் இன்றியே//
எளியோரை வதைத்து
ஏற்றம் கண்டிடும்//
வலிமை படைத்த
வல்லரசும் உண்டே//
அமைதியாய் அகிலம்
அனுதினம் சுற்றிட//
அன்பால் இணைந்தே
அறவழியில் நடந்திடு//

புனிதா கரன்
கவிதை 05
UK

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading