புனிதா கரன் கவிதை 05

புனிதா கரன்
கவிதை 05

நவின உலகிலே
நாகரிக மோகமே//
அச் சுறுத்துதே
தொழிநுட்ப வளர்ச்சி//
உயிரைக் குடித்திடும்
கொடிய நோய்களே//
வையகமெங்கும் பரவியே
வாழ்வை பயமுறுத்துதே//
கவலை வாட்டும்
கொடிய நேரத்திலே//
உயிர்நேயம் மாந்தனிடம்
ஊமையானது ஏனோ??//
நம்முன்னோர் போதித்த
நற்சிந்தனைகள் எங்கே??//
காற்றிலே பறக்க
கடமை தவறினோமே//
ஆபத்தைக் கண்டு
உதவிட உள்ளம்//
புகைப்படம் எடுத்து
முகநூலில் பதிவிடுதே//
மனதில் சிறிதும்
ஈரம் இன்றியே//
எளியோரை வதைத்து
ஏற்றம் கண்டிடும்//
வலிமை படைத்த
வல்லரசும் உண்டே//
அமைதியாய் அகிலம்
அனுதினம் சுற்றிட//
அன்பால் இணைந்தே
அறவழியில் நடந்திடு//

புனிதா கரன்
கவிதை 05
UK

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading