புனிதா கரன் கவிதை 05

புனிதா கரன்
கவிதை 05

நவின உலகிலே
நாகரிக மோகமே//
அச் சுறுத்துதே
தொழிநுட்ப வளர்ச்சி//
உயிரைக் குடித்திடும்
கொடிய நோய்களே//
வையகமெங்கும் பரவியே
வாழ்வை பயமுறுத்துதே//
கவலை வாட்டும்
கொடிய நேரத்திலே//
உயிர்நேயம் மாந்தனிடம்
ஊமையானது ஏனோ??//
நம்முன்னோர் போதித்த
நற்சிந்தனைகள் எங்கே??//
காற்றிலே பறக்க
கடமை தவறினோமே//
ஆபத்தைக் கண்டு
உதவிட உள்ளம்//
புகைப்படம் எடுத்து
முகநூலில் பதிவிடுதே//
மனதில் சிறிதும்
ஈரம் இன்றியே//
எளியோரை வதைத்து
ஏற்றம் கண்டிடும்//
வலிமை படைத்த
வல்லரசும் உண்டே//
அமைதியாய் அகிலம்
அனுதினம் சுற்றிட//
அன்பால் இணைந்தே
அறவழியில் நடந்திடு//

புனிதா கரன்
கவிதை 05
UK

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading