புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

பூக்களின் புதுவசந்தம்

கவி 719

பூக்களின் புதுவசந்தம்

இலைகளை உதிர்த்து களையிழந்து கிடந்த செடிகளில்
முளைவிட்டு துளிர்த்த கிளைகளில் வர்ண அலங்காரங்கள் தொங்கின
பூக்கள் பூக்கும் தருணமிது ஏனெனில் இது புது வசந்தகாலம்
பார்க்கும் இடங்களிலெல்லாம் புஸ்பங்கள் புன்னகைத்தே தேனீக்களை விருந்துக்கழைத்தன

சித்திரை மாதம் இத்தரையெங்கும் முத்திரை பதிக்கும் புதுவசந்தம்
உருக்குலைந்து கிடந்த சோலைகளெல்லாம் புதுப்பொலிவுடனான சுகந்தம்
மரங்களுக்கு ஏன் இந்த அவசரமோ
இலை வருமுன்பே பூக்கின்றன
வரம்வாங்கி வசந்தத்தை தென்றலும் வாசத்தை வசப்படுத்தி சுவாசத்தை குசிப்படுத்துகின்றது

நிர்வாண மரங்களெல்லாம் ஆடையுடுத்தி தன்னை அலங்கரிக்க வந்ததன்றோ நேரம்
கர்வத்தை மரங்களுக்கு வரவைத்திடவே காம்புகளில் தொங்குகின்றதே அழகுக் குவியல்கள்
எழிலிலைப் பூசியே இயற்கையும் விழிகளுடன் கதைபேசி காதலிக்கும்
வழியெல்லாம் பூக்களின் மாநாடு இனிய வசந்தத்தின் வரவோடு

ஜெயம்
11-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading