பூக்களின் பூ வசந்தம்

கவிதை இலக்கம் 9
பூக்களின் பூ வசந்தம்
புன்னகையின் அடையாளமாய்
பூவையரின் மொழியாய்
வண்ணங்களின் பிறப்பிடமாய்
வாசனையின் உறைவிடமாய்
வசந்த கால நயகியாய்
வந்து செல்வாய் வானவில்லாய்
புதிதாய் தினமும் நீ வந்நு
பூரித்தெம்மை ஆட்கொண்டு
புத்துணர்வூட்டி புலன் அள்ளி செல்லும் நீ
பூ என்ற பெயராளே
பூமியின் திருமகளானாயே
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading