“பேரிடர்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214

“பேரிடர்”
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!

ஊர்மனைகளுக்குள்
இயந்திர படகுகள்
மக்களை மீட்ட காட்சி
இது என்ன கொடுமை
இது என்ன வறுமை!

காற்றுக்கு
என்ன வேலி
மண்சரிவுக்கு ஏது வாசல்
நீரை தடுக்க
ஏது செய்வம்
விரிந்தினர் போல் வந்து
போகட்டும்!

மண்சரிவு
தொடரும் இடத்தில்
மக்களை குடியமர்த்துவது சரியா?
மலையக தமிழர்
வாழும் நிலப்பரப்பில் ஆண்டாண்டு அழிவின் அவலம்!

மக்கள் தண்ணீர்
வெள்ளத்தில் சிதைந்ததும்
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி
சதியா விதியா
சடங்கு செய்யவும் யாரும் இல்லை!

ஆகாயம் கூறும் வாய்மை
யோசிக்கும்
கூர்மை!
நன்றி
வணக்கம் 🙏

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading