அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

பொன்.தர்மா.

வணக்கம்.
சந்தம் சிந்தும் கவி நேரம்.
********குடு குடு கிழவி *******
“”‘””‘””'”’””””””””””””””””””””””
வக்கணையாய்ப் பேசும் வாயாடிக் கிழவி அவள்.
வாயாலை புகைவிட்டே வங்காளமும் போய் வருவாள்.

செதுக்கிய சிலையாட்டம் , இளம் பருவக்,காலமதில்.
உருகியே , தடியாக , ஓய்ந்த இந்த, நேரமதில்.

வாயில் , தடதடக்கு , சொல்லில் பெரு மிடுக்கு .
காலில் உறுதி வேண்டி , கம்பு ஒன்று கையில் பிடிப்பு.

ஆடு , மாடு , பட்டியென , வருமானமும் அள்ளிக் கொட்டும்.
கோடிப் புறங்களெல்லாம், குலக்கு மாங்கனிகள் , தரை தட்டும்.

கொல்லைப் பக்கத்திலை , கோணலான ஒரு பட்டை .
கோழிகளோ , கும்பலாகப்
போட்டிருக்கும் , அதிலே , நிறைய முட்டை .

சள்ளையிலே , சதிராடும் , சாயம் கழன்ற கறுப்புப் , பை .
கிள்ளி அசை போட, அதற்குள்ளே நுழையும், அடிக்கடி , அவரது , கை .

பெற்றுப் போட்டதுவும், கிழவியோ,எட்டுப் பத்து. ( ஆனால்)
எடுபிடிக்கோ உதவுவது, பக்கத்து வீட்டுப் , பட்டு ….
குடு குடு கிழவி…
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan