மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்
இல .518
தலைப்பு
**** அகப்பை. , அகம் + பை****
——++++++—+++++———-
மனிதன் , இதில் ஒன்றை, உருவாக்கி அழகூட்டினான்.
மற்றொன்றை, இறைவன் உருவாக்கி ,உயிர் கொடுத்தான்.

பரிமாற்றம்,பாவனைகள்,பலதுமாய் , நிலை மாற்றம் பலவும் உண்டு.
பகுத்தறிந்து பாவிப்பதில்,சிலரிடையே ,சில மாற்றமும் உண்டு.

( அன்பை) அள்ளிப் பரிமாறி, ஆழ் மனதில் இடம் பிடிகும், இதில் ஒன்று.
கிள்ளிப் பரிமாறக்,குவளையுள்ளே கூத்தடிக்கும், மற்றொன்று.

ஆத்திரம், அவதி கொண்டு, அடிதடி க்கும், தூக்குதலுண்டு.
ஆறாத் துயரினாலே, அகப்பையுமோ, முறிபட்டு மாய்வதுண்டு.

அன்பினை நிறைக்கையிலே, ஆனந்தம் , ஊற்றெடுத்துப் பெருகும்.
பண்பினை , இழக்கையிலே, பாவம் குடி கொள்ளும் கோட்டையாக , உரு மாறும்.
அது……….அக…….பை
அன்புடை உபசரிப்பு, அது , அகப்பை பிடிக்கும் , அழகினிலே தெரியும்.
ஆக்கினை யால் உபசரிப்போ, அகப்பை வைத்துத் , துலாவி எடுக்கையிலே புரியும்.
“”” பொன்.தர்மா””'”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading