“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்
இல .518
தலைப்பு
**** அகப்பை. , அகம் + பை****
——++++++—+++++———-
மனிதன் , இதில் ஒன்றை, உருவாக்கி அழகூட்டினான்.
மற்றொன்றை, இறைவன் உருவாக்கி ,உயிர் கொடுத்தான்.

பரிமாற்றம்,பாவனைகள்,பலதுமாய் , நிலை மாற்றம் பலவும் உண்டு.
பகுத்தறிந்து பாவிப்பதில்,சிலரிடையே ,சில மாற்றமும் உண்டு.

( அன்பை) அள்ளிப் பரிமாறி, ஆழ் மனதில் இடம் பிடிகும், இதில் ஒன்று.
கிள்ளிப் பரிமாறக்,குவளையுள்ளே கூத்தடிக்கும், மற்றொன்று.

ஆத்திரம், அவதி கொண்டு, அடிதடி க்கும், தூக்குதலுண்டு.
ஆறாத் துயரினாலே, அகப்பையுமோ, முறிபட்டு மாய்வதுண்டு.

அன்பினை நிறைக்கையிலே, ஆனந்தம் , ஊற்றெடுத்துப் பெருகும்.
பண்பினை , இழக்கையிலே, பாவம் குடி கொள்ளும் கோட்டையாக , உரு மாறும்.
அது……….அக…….பை
அன்புடை உபசரிப்பு, அது , அகப்பை பிடிக்கும் , அழகினிலே தெரியும்.
ஆக்கினை யால் உபசரிப்போ, அகப்பை வைத்துத் , துலாவி எடுக்கையிலே புரியும்.
“”” பொன்.தர்மா””'”

Nada Mohan
Author: Nada Mohan