மதிமகன்

சம்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 266
21/05/2024 செவ்வாய்
நிர்மூலம்
————-
தூங்காத அவர் விழிகள் ..
தூங்குகின்ற வேளையிலே..
ஆங்கார வெறிகொண்டு .,
அழித்தீரே அவரிடத்தை!

இறப்பின் பின் எல்லோரும்,
இறையாவார் என்றறிந்தும்,
மறத்தமிழர் அவரிடத்தை..
மாசாக்கி அழித்தது ஏன்?

வித்துடல்கள் புதைத்த..
விளை நிலத்தை உழுது..
புத்தனின் போதனையை..
புஸ்வாணம் ஆக்கினரோ!

மாங்காய் உருவம் கொள்..
மாணிக்க துவீபத்தின்….
பாங்கற்ற இச்செயலால்..
பரிகாசம் நீர் கொண்டீர்!

புதைத்த அவருடல்கள்..
புத்துயிர் பெறுமென்றா..
நினைவிடத்தை நீரழித்து..
நிர்மூல மாக்கி விட்டீர்?

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading