கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 286
12/11/2024 செவ்வாய்
“சூர வதை”
—————
கந்தபுராணம் சொல்லும் கதை!
கந்தனவனும் வெல்லும் கதை!
சிந்தைதனில் நிற்கும் கதை!
சீலம்தனை செப்பும் சூரவதை!

எத்தனை கதைகள் கேட்டாலும்
இதிகாச புராணம் சொன்னாலும்
வித்தகர் பலரும் உரைத்தாலும்
வினைசெய் பாதகர் விழியாரோ!

ஆணவச் சூரர்கள் ஆயிரமுண்டு!
ஆடிடும் அவருக்கு கூட்டமுண்டு!
கோணாமல் கேட்க யாருண்டு?
கொட்டம் அடக்க வழியுண்டோ?

சிவன் என்றிங்கு யாருமில்லை!
சித்தரை நம்பிட முடியவில்லை!
அவனி வனென்று முடிவுமில்லை!
அநேக சூரரால் கடும்தொல்லை!

நீதி நியாயமோ எங்குமில்லை!
நீசரை ஒழிக்கவும் சட்டமில்லை!
நாதியிலா நமக்கும் வழியில்லை!
நமக்காய் வேலனும் வருவானோ?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading