மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 286
12/11/2024 செவ்வாய்
“சூர வதை”
—————
கந்தபுராணம் சொல்லும் கதை!
கந்தனவனும் வெல்லும் கதை!
சிந்தைதனில் நிற்கும் கதை!
சீலம்தனை செப்பும் சூரவதை!

எத்தனை கதைகள் கேட்டாலும்
இதிகாச புராணம் சொன்னாலும்
வித்தகர் பலரும் உரைத்தாலும்
வினைசெய் பாதகர் விழியாரோ!

ஆணவச் சூரர்கள் ஆயிரமுண்டு!
ஆடிடும் அவருக்கு கூட்டமுண்டு!
கோணாமல் கேட்க யாருண்டு?
கொட்டம் அடக்க வழியுண்டோ?

சிவன் என்றிங்கு யாருமில்லை!
சித்தரை நம்பிட முடியவில்லை!
அவனி வனென்று முடிவுமில்லை!
அநேக சூரரால் கடும்தொல்லை!

நீதி நியாயமோ எங்குமில்லை!
நீசரை ஒழிக்கவும் சட்டமில்லை!
நாதியிலா நமக்கும் வழியில்லை!
நமக்காய் வேலனும் வருவானோ?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading