மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
28/03/2023 செவ்வாய்
“நீர்க்குமிழி”
—————
பட்டி நிறை வெள்ளத்திலே
பாவை யென்று வந்தவளே!
எட்டி நின்று பார்க்கையிலே
என் உள்ளம் கவர்ந்தவளே!

குட்டிக் குட்டி குமிழெனவே
குடைபிடித்து வருபளே!
ஒட்டி ஓடும் வெள்ளத்திலே
ஒவ்வொன்றாய் ஒளிர்பவளே!

கண்ணாடி உடல் வாகில்
கட்டழகு கொண்டவளே!
பின்னாடி விரல் பட்டால்
பிடித்தவுயிர் மாய்ப்பவளே!

கைபட்டால் உயிர் மாய்க்கும்
கற்புக்கரசி ஆனவளே!
மெய்பட்டால் துவண்டு விழும்
மேலான குணத்தவளே!

வேறு
———
நீர்க் குமிழே வாழ்வென
நீத்தார் சொல்லிச் செல்ல!
ஊர்க்கிது உபதேச மென
ஊர்க்குருவி ஒன்று சொல்ல!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading