பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 203
06/12/2022 செவ்வாய்
“மார்கழி”
*******
பொங்கல் தரும் எங்கள்
புதிய “தை” மகளுக்கு
திங்கள் ஒன்று மூத்தவளே
திரு வுருவே மார்கழியே!

கார்முகில் நிறத்தவளே
காரிகையே மார்கழியே!
தார்மீகக் குணத்தவளே
தாரகையே, தாரணியே!

சிந்தும் மழைத் துளியில்
சிலிசிலிர்த்து நின்றவளே!
எங்கும் ஒரே பச்சையென
எழில் உருவாய் ஆனவளே!

ஆதிரைப் பெரு விழாவும்
ஆண்டவர் ஜேசு பிறப்பும்
சீதனமாய் எமக் கீந்தாய்
சீர் பெண்ணே நீ வாழ்க!

ஊர் எங்கும் முற்றத்தில்
உல கறியக் கோலங்கள்
கார் விலகி விடு முன்னர்
காணும் பெரும் விருந்து!

ஏர் ஓட்டும் வயலெங்கும்
நீர் நிறைந்து நிற்கையிலே
கார் கொணர்ந்த மீனினமும்
கபடி விளை யாடு மங்கே!

அட்டையும், கொடும் பாம்பும்
அடங்காக் குரல் தவளையும்
கொட்டும் பெரும் தேள்களும்
கோலோச்ச ஏன் விட்டாய்?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading