திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 203
06/12/2022 செவ்வாய்
“மார்கழி”
*******
பொங்கல் தரும் எங்கள்
புதிய “தை” மகளுக்கு
திங்கள் ஒன்று மூத்தவளே
திரு வுருவே மார்கழியே!

கார்முகில் நிறத்தவளே
காரிகையே மார்கழியே!
தார்மீகக் குணத்தவளே
தாரகையே, தாரணியே!

சிந்தும் மழைத் துளியில்
சிலிசிலிர்த்து நின்றவளே!
எங்கும் ஒரே பச்சையென
எழில் உருவாய் ஆனவளே!

ஆதிரைப் பெரு விழாவும்
ஆண்டவர் ஜேசு பிறப்பும்
சீதனமாய் எமக் கீந்தாய்
சீர் பெண்ணே நீ வாழ்க!

ஊர் எங்கும் முற்றத்தில்
உல கறியக் கோலங்கள்
கார் விலகி விடு முன்னர்
காணும் பெரும் விருந்து!

ஏர் ஓட்டும் வயலெங்கும்
நீர் நிறைந்து நிற்கையிலே
கார் கொணர்ந்த மீனினமும்
கபடி விளை யாடு மங்கே!

அட்டையும், கொடும் பாம்பும்
அடங்காக் குரல் தவளையும்
கொட்டும் பெரும் தேள்களும்
கோலோச்ச ஏன் விட்டாய்?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading