“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-156
04/01/2022 செவ்வாய்
“இலக்கு”
வருடத்தில் ஒரு முறை
வருமே புதுப் பிரதிக்ஞை!
வாழ்ந்திடும் அவற்றில் சில
வலுவிழந்து போகும் பல!

தூய்மை உள்ள பிரதிக்ஞை
துளியேனும் விலகா நிற்கும்!
காயாகிப் பழமாகாமல் சிலவும்
கருகிய பூவாய் அற்றுப் போம்!

இனியில்லை சிகரெட் என்பர்
இன்று மட்டுமே மது என்பர்
அடுத்த நாளே எல்லாம் போக
அடிப்படியில் இறங்கி நிற்பர்!

பெற்றோரை மறவோம் என்பர்
பிறவிப் பயனே அதுவே என்பர்
கற்றவரை மதிப்போம் என்பர்
கடுகதியில் எல்லாம் மறப்பர்!

என்னுள்ளும் ஒரு பிரக்திக்ஞை
எப்போதும் நெஞ்சில் வாழ்ந்து
என்னூர்க்கு உதவத் துடிக்கும்
இந்த வருடமும் அது நீடிக்கும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan