மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-156
04/01/2022 செவ்வாய்
“இலக்கு”
வருடத்தில் ஒரு முறை
வருமே புதுப் பிரதிக்ஞை!
வாழ்ந்திடும் அவற்றில் சில
வலுவிழந்து போகும் பல!

தூய்மை உள்ள பிரதிக்ஞை
துளியேனும் விலகா நிற்கும்!
காயாகிப் பழமாகாமல் சிலவும்
கருகிய பூவாய் அற்றுப் போம்!

இனியில்லை சிகரெட் என்பர்
இன்று மட்டுமே மது என்பர்
அடுத்த நாளே எல்லாம் போக
அடிப்படியில் இறங்கி நிற்பர்!

பெற்றோரை மறவோம் என்பர்
பிறவிப் பயனே அதுவே என்பர்
கற்றவரை மதிப்போம் என்பர்
கடுகதியில் எல்லாம் மறப்பர்!

என்னுள்ளும் ஒரு பிரக்திக்ஞை
எப்போதும் நெஞ்சில் வாழ்ந்து
என்னூர்க்கு உதவத் துடிக்கும்
இந்த வருடமும் அது நீடிக்கும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading