” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-156
04/01/2022 செவ்வாய்
“இலக்கு”
வருடத்தில் ஒரு முறை
வருமே புதுப் பிரதிக்ஞை!
வாழ்ந்திடும் அவற்றில் சில
வலுவிழந்து போகும் பல!

தூய்மை உள்ள பிரதிக்ஞை
துளியேனும் விலகா நிற்கும்!
காயாகிப் பழமாகாமல் சிலவும்
கருகிய பூவாய் அற்றுப் போம்!

இனியில்லை சிகரெட் என்பர்
இன்று மட்டுமே மது என்பர்
அடுத்த நாளே எல்லாம் போக
அடிப்படியில் இறங்கி நிற்பர்!

பெற்றோரை மறவோம் என்பர்
பிறவிப் பயனே அதுவே என்பர்
கற்றவரை மதிப்போம் என்பர்
கடுகதியில் எல்லாம் மறப்பர்!

என்னுள்ளும் ஒரு பிரக்திக்ஞை
எப்போதும் நெஞ்சில் வாழ்ந்து
என்னூர்க்கு உதவத் துடிக்கும்
இந்த வருடமும் அது நீடிக்கும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan