15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 163
22/02/2022 செவ்வாய்
“சாந்தி”
முகிழ்ந்த மொட்டு விரிந்திட்டால்
முல்லைக் கொடியும் சிரித்துவிடும்!
மகிழ்ந்து மனது திளைத்திட்டால்
மனதில் சாந்தி கிடைத்து விடும்!
மனதில் பதிந்த மங்கை யவள்
மனைவி யானால் மகிழ்வு வரும்!
கனவு யாவும் பலித்து விடும்
காத்திர மான அமைதி வரும்!
மழலைக் குரலைக் கேட்டதுமே
மனது மிகவும் அமைதியுறும்!
ஆழிக் கடல் அலையது போல்
ஆடும் மனது சாந்தி பெறும்!
கலையே மனித மனத்தினது
கவலை தீர்க்கும் மருந்தாகும்!
அலையும் மனத்தின் இடர் நீக்கி
ஆழ்ந்த அமைதி தந்துவிடும்!
காயம் பட்ட மனங்களுக்கும்
காலம் மாறும், காயம் தேறும்!
கொரோனா நோயும் தீர்ந்துவிடும்
கோலோச்சச் சாந்தி மீள வரும்!
நன்றி

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...