13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 168
29/03/2022 செவ்வாய்
“உன்னழகில் பித்தானேன்!”
———————————-
சாரளம் ஊடாய் ஓர் நாளில்
சாடை கொஞ்சம் நான் விட்டேன்!
பேரழகே நானும் உந்தனிலே
பேயும் பிடித்தேன், பித்தானேன்!
கரிய செந்நிறச் சேலையிலே
கண்டேன் உந்தன் பேரழகை!
அரிய வண்ணம் உன்மேனி
ஆகா என்ன வனப்பென்றேன்!
இளஞ் சிகப்புச் சேலை யிலும்
எடுப்பாய் நீயும் உலா வந்தாய்!
உளமே இழந்தேன் உன்னாலே
ஊரவர் இகழும் பொருளானேன்!
மஞ்சள் வண்ணச் சேலையிலே
மனதை மேலும் மயக்கி விட்டாய்!
கொஞ்சும் கிளிபோல் நெஞ்சத்திலே
கோலோச்ச நீயும் உடன்வந்தாய்!
வெள்ளை நிற உடுப்பினிலே
வியந்து நிற்க வைத்தாயே!
கொள்ளை அடித்து என்மனதை
கூனிக் குறுக வைத்தாயே!
ஆசையும் மீறிப் போயிடவே
அணைக்க வந்தேன் உந்தனையே!
கூசாது உந்தன் காவலர்கள்
குத்தியே விட்டனர்….ரோசாவே!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...