23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 168
29/03/2022 செவ்வாய்
“உன்னழகில் பித்தானேன்!”
———————————-
சாரளம் ஊடாய் ஓர் நாளில்
சாடை கொஞ்சம் நான் விட்டேன்!
பேரழகே நானும் உந்தனிலே
பேயும் பிடித்தேன், பித்தானேன்!
கரிய செந்நிறச் சேலையிலே
கண்டேன் உந்தன் பேரழகை!
அரிய வண்ணம் உன்மேனி
ஆகா என்ன வனப்பென்றேன்!
இளஞ் சிகப்புச் சேலை யிலும்
எடுப்பாய் நீயும் உலா வந்தாய்!
உளமே இழந்தேன் உன்னாலே
ஊரவர் இகழும் பொருளானேன்!
மஞ்சள் வண்ணச் சேலையிலே
மனதை மேலும் மயக்கி விட்டாய்!
கொஞ்சும் கிளிபோல் நெஞ்சத்திலே
கோலோச்ச நீயும் உடன்வந்தாய்!
வெள்ளை நிற உடுப்பினிலே
வியந்து நிற்க வைத்தாயே!
கொள்ளை அடித்து என்மனதை
கூனிக் குறுக வைத்தாயே!
ஆசையும் மீறிப் போயிடவே
அணைக்க வந்தேன் உந்தனையே!
கூசாது உந்தன் காவலர்கள்
குத்தியே விட்டனர்….ரோசாவே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...