06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 205
03/01/2023 செவ்வாய்
“தை மகளே!”
———————
தைமகளே! தலை மகளே வருக!
தரணி போற்றிடும் தாயே வருக!
மையிட்ட கண் பெண்ணே வருக!
மங்களம் நிறைவாய் தந்திட வருக!
முப்பத் தொரு நாட்களுடன்,
முகூர்த்த நாளும் கொண்டவளே!
செப்பிய படியே மணவறையில்,
சேர்ந்து கொள்ள வைப்பளே!
புற்றை வெட்டி, மண் எடுத்து,
புதிய அடுப்பு தனைப் பிடித்து,
கற்ற அழகுக் கோல மிட்டு,
கதிரவன் தன்னை வரவேற்க!
நெல்லு மணியின் உமி நீக்கி,
நெய்யும் சேர்த்து பொங்க லிட,
வெல்லம், பாலும், முந்திரியும்,
வேண்டி விரும்பிச் சேர்ந்திடவே!
துன்பமும் துயரமும் கருகிடவே,
தூய்மை துளிர்த்துத் தழைத்திடவே,
வன்மமும் வஞ்சமும் ஒழிந்திடவே,
வஞ்சியே வருக! வளம் தரவே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...