பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

கருத்துரைப்புக் கவி

வாரமொரு கவிஞர் திறனாய்வுக் கவிஞர் எனும்வளர்வோடு உலாவரும் சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிவரிகளை மட்டுமே வரியெடுத்துக் கொட்டவில்லை நீ
ஆய்வுக் கண்ணாலும் கொத்தி
நேர்த்தி கூட்டுகிறாய்
பாவையண்ணாவின் கவிக்கண்கள்
வரிஉணர்வுகளை நுகர்ந்து கவிநிலை சுட்டும்.
நம் ஆக்கம் அவர் நாவால் நற் கவியாய் பூக்கும்.
சொல்லடுக்கு பாவம் கொட்டி
கவிமேற்கோள் இடையிடையே காட்டி
சுவைத்திடவும் தூண்டி

தேவையான மாற்றங்களை
செப்பணிட்டு
கட்டமைப்பதும் பாவை அண்ணா பணி
சொல்,வரி வெட்ட்உம்
பூட்டலும் அதியற்புதமான
வர்மம்
எம் கவியும் குறைவிட்டு
களம் தொடும்

சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிப்பூப்புக்களின்
வளர்வுக்கான திறன் வெளியீட்டுக்கானா நால் அறிமுக விழா வைத்த தமிழாளரே
வாழ்த்தியே விடைபெறுகின்றேன்.

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan