மனோகரி ஜெகதீசன்

விருப்பத் தலைப்பு

நீதிவழி நிற்பாருக்கே கேடிங்கு
நிம்மதியும் காணாது போனது சுருங்கி
மோதிச் சுழன்று மேனிலை கழன்று
மேய்ப்பன் இன்றிச் சுருண்டு
நாதியற்ற பரதேசிகளாய் நடுங்குகின்றோம்
நாளை ஏதென்ற வினாவினை விழுங்கி
போதி மரத்தடிப் புத்தரும் பெரும் பாவியானார் இவர்வழி
ஓதிச் சென்றது உண்பதற்கோ எமை
ஒப்பிட்டுப் பாருங்களேன் ஒருமுறை அதை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading