மனோகரி ஜெகதீஸ்வரன்

மணி

மணிவகைகள் எண்ணில் பலவாகும்
மனிதரைப் பலவழி உயர்வாக்கும்
அணிந்திடு மணிகள் அழகாக்கும்
அணிபவர் மனத்தையும் சுகமாக்கும்
மணிமணி எழுத்தைக் கரமாக்கின்
மருளின்றிக் கருத்தும்
புலனாகும்

இறையணி கண்டுகலக்க ஏவுவதே கோயில்மணி
இதயத்தைத் தூண்டிநிதம் இயக்குவதே அதன்பணி
முறைகாட்டி குறைகழற்ற ஒலிப்பதுவே பள்ளிமணி
முற்றியபின் அரிகைகண்டு
உணவாவது நெல்லுமணி

நடைக்கிசைந்து அசைந்தொலிக்கும்
நங்கையணி கொலுசுமணி
நகையிடவே அணிந்தாளே
நகைக்கும் பொன்மணி
எடைகாட்ட உதவிடுமே கருஞ்சிவப்புக் குன்றிமணி
எடுத்தசைக்க நாவாட்டும்
ஏந்தியவர் கைமணி

விழிக்கூட்டில் கருமேட்டில் குடியிருப்பது
கண்மணி
விருந்தினர் வரவறிய வீட்டிலிருப்பது அழைப்புமணி
மொழியதிர வில்லசைத்தார்
மோகனமாய்ச்
சின்னமணி
சுழன்றாடி
ஒலியலையைத்
துப்பியது
வில்லுமணி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading