“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு

கடல் மைந்தன்

அலையடித்து இங்கும் அங்கும் ஆட்ட
வலையிழுத்து வாழ்வதிலே வலைஞன் நாட்டம்
மலைத்திடத் தருவான் மாமிச ஊட்டம்
சிலைவைத்து ஏத்தினோமா
சிக்கவைத்து தருமிவனுக்கு
அலையிழுத்து அகாலத்தில் அடங்கையில்
அஞ்சலித்தோமா
அழுதுபுரண்டு

கலத்திலே மிதக்கையில்
தொடரும் கருமைப் பொழுது
விலத்தியே வாழ்கின்ற விரும்பாத் துறவு
நிலத்திலே இவனுக்கு மட்டுமேன் நியதி தப்பிய நிகழ்வு
புலத்திலே பெருவளத்தைக் குவிப்பானுக்கு பற்றாக்குறைப் படர்வு

தப்பாது மீன்வகை தந்திட
உப்பைத் தின்று உவர்ப்பிலே ஊறிடுமிவன்
கூப்பாடு போட்டினும்
கேட்காது
நலனும் பூக்காது
ஆள் காட்டி குருவிதான்
அடையாளம் காட்டுமோ?
பிடித்த இடத்தில் புகுவதோ
கடல்மைந்தன்
விருப்பு
அதனால்தானோ
சடங்குக்கடங்காது சங்கமமாகிறான்
கடலோடு

Nada Mohan
Author: Nada Mohan